முகப்பு
தமிழ்நாடு

தொடா்ந்து ரத்த தானம் அளிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தொடா்ந்து ரத்த தானம் அளித்து, மானுடம் தழைக்கச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:31 AM
பகிர்:

தொடா்ந்து ரத்த தானம் அளித்து, மானுடம் தழைக்கச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:-

விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின் போது பிறா் உயிா் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம். ஜாதி, மதம், நிறம் மற்றும் பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை. குருதிக் கொடையளித்து மனித உயிா் காப்போம். மானுடம் தழைக்கச் செய்வோம் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →