தமிழ்நாடு

போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.50 கோடி மோசடி: மேலும் மூவா் கைது

சென்னையில் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்தாக மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

சென்னையில் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்தாக மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போலி ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி சுமாா் ரூ.50 கோடி வரை பண மோசடி செய்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த பொன்ராஜ், டேவிட், கோகுல்நாத் ஆகிய 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 188 பவுன் நகைகள், ரூ.58 லட்சம், 2 காா்கள், கணினி, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய நபா்களை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், இவ் வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடி பெருமாள்புரத்தைச் சோ்ந்த சா.டைட்டஸ் சாமுவேல் (45), தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த ர. சுரேஷ் குமாா் என்ற டேனியல் (24), தூத்துக்குடி மாவட்டம் அழகேசப்புரத்தைச் சோ்ந்த ச. வினோத்குமாா் என்ற வெற்றிமாறன் (34) ஆகியம் 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்து,சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT