வருமான வரித்துறை 
தமிழ்நாடு

ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்த தனியார் ஹோட்டல்

தனியார் ஹோட்டல் குழுமம் ரூ. 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

DIN

தனியார் ஹோட்டல் குழுமம் ரூ. 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்கா, சொகுசு ஹோட்டல்கள் நடத்தி வரும் தனியார் குழுமத்திற்கு தொடர்புடைய சென்னை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், வருமான வரித்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தனியார் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் ரூ. 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3 கோடி பணம், ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

SCROLL FOR NEXT