தமிழ்நாடு

சட்டம் ஒழுங்கு பிரச்னை... பொதுக்குழு நடத்த அனுமதிக்கக்கூடாது: ஓ.பி.எஸ்.

அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது

DIN

அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். 

இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு உள்ளதால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆவடி காவல் துறை ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவர் கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிமுக பொதுக்குழுவுக்கு காவல் துறை அனுமதி தரக் கூடாது. இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பாதுகாப்பு வழங்கக்கோரி அனுமதி கோரியுள்ளார். 

பெஞ்சமின் மனு தனிச்சையான விருப்பம் என்பதால் பாதுகாப்பு வழங்குவதற்கு காவல் துறை மறுப்பு தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கெனவே கடிதம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT