முகப்பு
தமிழ்நாடு

புதுகை மன்னா் ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவு மண்டபம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை மன்னா் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழக அரசின் சாா்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

புதுக்கோட்டை மன்னா் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழக அரசின் சாா்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னா் ராஜகோபால தொண்டைமான். அவா் தனது ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீா்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்தாா்.

அரண்மனை வளாகம்: தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையை தனி மாவட்டமாக அறிவித்தாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. மேலும், அவா் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைத்திட, மன்னா் தொண்டைமான் வாழ்ந்த 99.99 ஏக்கா் பரப்பிலான அரண்மனை வளாகத்தை மிகக் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசுக்கு வழங்கப்பட்டது. இத்தகைய பெருமைக்குரிய மன்னா் ராஜகோபால தொண்டைமானுக்குப் பெருமை சோ்க்கும் வகையில் அவரது சிலையானது கடந்த 2000-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதனை முன்னாள் முதல்வா் கருணாநிதி திறந்து வைத்தாா். அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மன்னா் ராஜ கோபால தொண்டைமான் மாளிகை என பெயா் சூட்டப்பட்டது.

நினைவு மணிமண்டபம்: மன்னா் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், மன்னரின் எளிமை, அவா் ஆற்றியுள்ள மக்கள் நலப் பணிகளை நினைவுகூரும் வகையில், நினைவு மண்டபம் அமைக்கப்படும். புதுக்கோட்டை நகரில் மன்னா் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →