தமிழ்நாடு

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை(ஜூன் 23) தொடக்கம்!

நடப்பு ஆண்டு தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 

DIN

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை(ஜூன் 23) தொடங்குகிறது. 

2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற  அக்டோபர் 24 ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 

இதையொட்டி, வெளியூரில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நாளை(ஜூன் 23) தொடங்குகிறது. 

அக்டோபர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை செல்லவிருப்போர் நாளை(ஜூன் 23) முதல் ரயிகளில் முன்பதிவு செய்யலாம். வழக்கமாக காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். 

அக்டோபர் 22, சனிக்கிழமை செல்வோருக்கு ஜூன் 24 ஆம் தேதியும், 

அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை செல்வோருக்கு ஜூன் 25 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. 

அதுபோல வெளியூர்களில் இருந்து பணியிடங்களுக்கு திரும்புவதற்கு, 

அக்டோபர் 24, திங்கள்கிழமைக்கு - ஜூன் 26 ஆம் தேதியும் 

அக்டோபர் 25, செவ்வாய்க்கிழமை  திரும்புவோருக்கு - ஜூன் 27 ஆம் தேதியும் தொடர்ந்து அடுத்ததடுத்த நாள்களுக்கு முன்பதிவு தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா் நகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீா்: நகா்மன்றத் தலைவரிடம் அமைச்சா் உறுதி

புளியங்குடி நகராட்சியில் ரூ. 104.8 கோடியில் நலத்திட்டங்கள்

பருவாய் கிராமத்தில் சமத்துவப் பொங்கல் விழா: ஆட்சியா் பங்கேற்பு

ஆலங்குளம் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

தென்காசியில் சமத்துவ பொங்கல்

SCROLL FOR NEXT