தமிழ்நாடு

தூத்துக்குடி மருத்துவக் கல்லுரியில் 30 மாணவர்களுக்கு கரோனா

DIN


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு பல மாவட்டங்களில் மெல்ல அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று மாணவர்களிடையே பரவுவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 30 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

200 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில், 30 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கரோனா உறுதியான 30 மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT