முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கரோனா

புதுச்சேரியில் மாநிலத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:38 AM
பகிர்:

புதுச்சேரியில் மாநிலத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

புதுச்சேரி மாநிலத்தில் 1,271 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 33 பேர், காரைக்காலில் வரிச்சிக்குடி, கோயில்பத்து, காரைக்கால் நகர் தலா ஒருவர் என 3 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும், மாஹேவில் ஒருவா் என 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,66,305 ஆக அதிகரித்துள்ளது.

இதில், 4 போ் மருத்துவமனைகளிலும், 234 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 20 பேர் குணடைந்துள்ளனர். 

மாநிலத்தில் இரு தவணை, முன்னெச்சரிக்கை தடுப்பூசி எடுத்தவர்கள் என 17,39,664 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.