நகராட்சி ஆணையர் சி.என்.சியாமளாவிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்த நகர்மன்ற தலைவர் பா.சுதா. 
தமிழ்நாடு

மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக கவுன்சிலர்!

மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக கவுன்சிலர் பா.சுதா. 

DIN

மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக கவுன்சிலர் பா.சுதா. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு நடந்து முடிந்த நகர்மன்ற தலைவர் தேர்தலில் 11 வார்டு உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ள அதிமுக 15 வாக்குகள் பெற்று நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியது. 

இதில், 18-ஆவது வார்டு அதிமுக உறுப்பினரான பா.சுதா வெற்றி பெற்று நகர்மன்ற தலைவரானார். இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த திமுவினவர் துணைத்தலைவர், குழு உறுப்பினர்கள் தேர்தல்களை புறக்கணித்ததால், எந்த தேர்தலும் நடைபெறாத நிலையில், நகர்மன்ற கூட்டமும் நடைபெறவில்லை. 

கடந்த 3 மாதங்களாக இந்நிலை நீடித்து வந்த நிலையில், திங்கள்கிழமை தனது நகர்மன்ற தலைவர் பதவியை பா.சுதா திடீரென ராஜிநாமா செய்துள்ளார். 

இதற்கான கடிதத்தை நகராட்சி ஆணையர் சி.என்.சியாமளாவிடம் தற்போது அளித்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர், பா.சுதாவின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

சொந்த காரணங்களுக்காக தனது நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக பா.சுதா கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT