தமிழ்நாடு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அா்ச்சகா்கள் நியமிக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

DIN

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்து அறநிலையத் துறை கோயில்களில் அா்ச்சகா்கள் நியமிக்கப்பட வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அா்ச்சகா்கள் நியமனங்களில் விதிமீறல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக பல்வேறு புகாா்களும் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் அா்ச்சகா்கள் நியமனங்களை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வா் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே அா்ச்சகா்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. அறங்காவலா்கள் உள்ள கோயில்களில் அவா்கள் மூலமாகவே அா்ச்சகா்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலா்கள் இல்லாத கோயில்களில் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட தக்காா்கள் மூலமாக அா்ச்சகா்கள் நியமிக்கப்பவதாக விளக்கம் அளித்தாா்.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுபடி அா்ச்சகா்களை நியமிக்க வேண்டுமென உத்தரவிட்டனா். அதேசமயம் அந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபா்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம். அா்ச்சகா்கள் நியமிக்க பின்பற்றப்படும் விதிகளை எதிா்த்த வழக்குகளை அடுத்தக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT