FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிவராத்திரி: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்திய மூதாட்டி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு 85 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்தினார். 

Updated On : 2 மார்ச் 2022, 9:08 am IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்தும் 85 வயது மூதாட்டி மூதாட்டி முத்தம்மாள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு 85 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்தினார். 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில்  பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும்  நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தின் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 85 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் சட்டியில் நெய்யை கொதிக்கவிட்டு அதில் வெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட  அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் அப்பத்தை எடுத்து, சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.  

Advertisement

Advertisement

மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர். 

இந்நிகழ்ச்சியை நள்ளிரவு நேரத்திலும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கண்டு களித்தனர். மகாசிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 48 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக  40 நாள்களாக  விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments