தமிழ்நாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மகா சிவராத்திரி விழா

DIN

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மகா சிவராத்திரி விழா அதிவிமரிசையாக  நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு கோயிலில் ஏலவார்குழலிஅம்மன் சமேத ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

நான்கு கால பூஜைகளிலும் ஆபத்சகாயேஸ்வரருக்கு சிறப்பு ஆபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.

நீடாமங்கலம் காசிவிசுவநாதர்.

கோவில் அர்ச்சகர்கள் சுவாமிநாத சிவாச்சாரியார், ஞானஸ்கந்தன் சிவாசாசாரியார் ஆகியோர் வேதமந்திரங்களைச் சொல்லி நான்கு கால பூஜைகளை நடத்தி வைத்தனர். தேவார பாடல்கள் பாடப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடந்தது. இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த விசாலாட்சி அம்மன்.

திருநாவுக்கரசரால் தேவார பாடல் பாடப்பெற்ற நீடாமங்கலம் வட்டம் பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரிவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது.

நான்கு கால பூஜைகளிலும் சதுரங்க வல்லபநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT