முகப்பு
தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு: ஒருநபர் ஆணையம் அமைப்பு

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்க ஒருநபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்க ஒருநபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு இன்று அமைத்துள்ளது.

மேலும், முறைகேடுகள் குறித்து மூன்று மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் டேவிதாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.