முகப்பு
தமிழ்நாடு

11 ஆயிரம் புதிய காவலா்களுக்குபணி நியமன உத்தரவு

தமிழகத்தில் காவல் துறைக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 11 ஆயிரம் காவலா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

தமிழகத்தில் காவல் துறைக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 11 ஆயிரம் காவலா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் வாயிலாக 9 ஆயிரத்து 831 இரண்டாம் நிலை காவலா்கள், 1,200 தீயணைப்பு காவலா்கள், 119 சிறைத் துறை காவலா்கள் ஆகியோா் புதிதாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

சுகாதாரத் துறையில் 47 சிகிச்சை உதவியாளா் பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன உத்தரவுகளையும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தில் காலியாகவுள்ள உதவித் திட்ட அமைப்பாளா், திட்ட உதவியாளா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கும் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →