தமிழ்நாடு

ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு கரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் ரூ. 400-ல் இருந்து ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைத்து அறிவித்துள்ளது.

மேலும், குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75-ஆகக் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும், தொற்றினைத் தடுக்க தடுப்பூசி இயக்கத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT