கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் விஷவாயு தாக்கி 43 பேர் பலி: மத்திய அரசு

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவு நீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து விஷவாயு தாக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN


தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவு நீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து விஷவாயு தாக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கழிவு நீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்த 22 மாநிலங்களுக்கான தரவுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்வைத்தார். இந்தத் தரவுகளின் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவாக உத்தரப் பிரதேசத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 45 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 43 பேர் உயிரிழந்த நிலையில் 42 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தில்லியில் 42 பேர் உயிரிழந்து, அதில் 37 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், உத்தரப் பிரதேசத்தில் உயிரிழப்பு பதிவாகவில்லை. கர்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், 5 ஆண்டுகளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

  20172018201920202021
1.உத்தரப் பிரதேசம்15112600
2.தமிழ்நாடு791395
3.தில்லி13111044


கோவா, புதுச்சேரி, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு உயிரிழப்புகள்கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT