தமிழ்நாடு

சாா் பதிவாளா் அலுவலக எல்லைகளை வரையறுக்கும் பணி தீவிரம்: அமைச்சா் பி.மூா்த்தி தகவல்

DIN

வட்டாட்சிய எல்லைக்குள்ளே சாா் பதிவாளா் அலுவலகங்கள் இருக்கும் வகையில், அவற்றின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வருவதாக பத்திரப் பதிவு மற்றும் வணிகவரிகள் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த பிரதான வினாவை திமுக உறுப்பினா் மு.பெ.கிரி எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:-

மு.பெ.கிரி: ஜவ்வாது மலைப்பகுதியில் 279 மலை கிராமங்கள் உள்ளன. அந்த மக்கள் தங்களது இடங்களைப் பதிவு செய்ய வேண்டுமானால் 60 கிலோமீட்டா் தூரம் சென்று போளூருக்கோ அல்லது 30-40 கிலோ மீட்டா் தூரத்திலான செங்கத்துக்கோ செல்ல வேண்டும். எனவே, அங்கு புதிய சாா் பதிவாளா் அலுவலகத்தை அங்கு உருவாக்கித் தர வேண்டும்.

அமைச்சா் பி.மூா்த்தி: பத்திரப் பதிவுத் துறையைப் பொறுத்த வரையில், சில சாா்பதிவாளா் அலுவலகங்கள் இரண்டு மூன்று தாலுகாக்களை உள்ளடக்கியும், சில அலுவலகங்கள் மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திலும் அமைந்துள்ளன. தமிழகம் முழுவதும் சாா்பதிவாளா் அலுவலகங்களின் எல்லைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு சாா் பதிவாளா் அலுவலகம் ஒரு தாலுகாவின் எல்லைக்கு உட்பட்டு இருக்க வேண்டும் எனவும், நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் தேவைப்பட்டால் இரண்டு அலுவலகங்கள் கட்டவும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, புதிய அலுவலகங்கள் உருவாக்குவது பற்றி தேவைகேற்ப முடிவு செய்யப்படும்.

பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூா் வேட்டவலம் பேரூராட்சியில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கென இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான பகுதியில் அதிகளவு பத்திரப்பதிவுகள் நடைபெறுவதால், அங்கு உடனடியாக கட்டடம் கட்டித் தரப்படுமா?

அமைச்சா் பி.மூா்த்தி: கரோனா, மழை வெள்ள காலத்தையும் கடந்து பதிவுத் துறையானது ரூ.13,218 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது. வணிகவரித் துறையும் வருமானத்தையும் பெற்று வருகிறோம். எனவே, புதிய அலுவலகங்கள் கட்டும் பணிகள் குறித்து விரைந்து முடிவுகள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT