தமிழ்நாடு

தொண்டி தமுமுக சார்பில் ரமலான் புத்தாடை வழங்கும் விழா

DIN


திருவாடானை: திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஏழை எளிய மக்களும் ரமலான் பெருநாளை சிறப்பாக கொண்டாட உணவு பொருள்கள் மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டி கிளை சார்பில் தொண்டி தமுமுக அலுவலகத்தில் தமுமுக கிளை அலுவலகத்தில ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை, அரிசி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல நல திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இதில் தொண்டி கிளை செயலாளர் முனவர் சம்சுதீன் தலைமை வகித்தார்.

தமுமுக மாநில செயலாளர் தொண்டி  சாதிக் பாட்சா புருனைமண்டல தலைவர் நூருல் அமின். மண்டலம் ஜைனுல் ஆபிதின், வழக்குரைஞர் ஜிப்ரி தமுமுக மாவட்ட செயலாளர் நசீர் ஒன்றிய தலைவர் பீர்முஹம்மது மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் தொண்டி ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மக்களுக்கு புத்தாடைகளும் உணவுப் பொருள்களும் உதவியும் பயணாளிகளுக்கு வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை தொண்டி தமுமுக பேரூர் தலைவர் பாதுஷா மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் பரக்கத் அலி, தமுமக பொருளாளர் முகைதீன், செய்யது அப்துல்காதர், தமுமுக துணைத் தலைவர் ஹம்மாது, காமராஜர், ஜலால், ஐ பி பி அன்சாரி, அப்துல் ரஹீம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஏராளமானோர் பொருள்களை வாங்கிச் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT