75வது சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றுமுதல் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா மற்றும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக ‘ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை’ கலைக்குழுவினருடன் இணைந்து மெல்லிசை கலை நிகழ்ச்சியை பின்வரும் தேதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை நடத்துகிறது.
2.5.2022 - விமான நிலையம் மெட்ரோ
9.2.2022 - சென்ட்ரல் மெட்ரோ
16.4.2022 - உயர்நீதிமன்றம் மெட்ரோ
23.4.2022 - விம்கோ நகர் மெட்ரோ
30.4.2022 - கிண்டி மெட்ரோ
சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் இசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து சிறப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர்.