மதுரை சர்வதேச விமான நிலையம்! அரசாணை வெளியீடு!
மதுரை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் அரசாணை வெளியிடப்பட்டது பற்றி...
மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக அறிவித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்ததாவது:
”மதுரை விமான நிலையத்தில் இருந்து சா்வதேச விமானங்களை இயக்க பல்வேறு விமான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த முடிவின்மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகா் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், பழமுதிா்சோலை முருகன் கோயில், ராமேசுவரம் ஆகிய முக்கிய ஆன்மிகத் தலங்களுக்கான இணைப்பு வசதிகள் மேம்படும்.
கோயில் நகரத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானப் போக்குவரத்து உறுதி செய்யப்படும்” என்றார்.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மதுரை மக்களும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் மதுரை விமான நிலையத்தில் விரைவில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படவுள்ளன.