புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத்தொழுகை
புதுக்கோட்டை நகரிலுள்ள ஈத்கா திடலில் செவ்வாய்க்கிழமை காலை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை: இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை நகரிலுள்ள ஈத்கா திடலில் செவ்வாய்க்கிழமை காலை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக ரமலான் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படாமல் இருந்த நிலையில் நிகழாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களுக்குள் ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.