சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
நீட் தேர்வில் விலக்கு கேட்கும் மசோதாவை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.
இதனை ஆளுநரின் செயலர், தொலைபேசி மூலம் தன்னிடம் தகவல் தெரிவித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.