தமிழ்நாடு

வழக்கறிஞர்களுக்கு அங்கி அணிவதிலிருந்து தற்காலிக விலக்கு: சென்னை உயர்நீதிமன்றம்

கோடைக்கால அமர்வுகளில் அங்கி அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

DIN

கோடைக்கால அமர்வுகளில் அங்கி அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வழக்கறிஞர்களுக்கு கருப்பு அங்கி அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. 

அந்த கோரிக்கையை ஏற்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, கோடைக்கால அமர்வுகளில் அங்கி அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்துள்ளதாக தலைமை பதிவாளர் பி.தனபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அங்கி அணிவதிலிருந்து விலக்கு அழைக்கப்பட்டாலும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டையை கட்டாயம் அணிய வேண்டும்  எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT