தமிழ்நாடு

திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி மெரினாவில் மணற்சிற்பம்

DIN

மெரினா கடற்கரையில் திராவிட மாடல் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டாா். பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

இந்த நிலையில் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய இந்த மணற் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

உதயசூரியன் வடிவத்தின் மையத்தில் முதல்வரின் முகத்துடன் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களை குறிக்கும் வகையிலும் மணற் சிற்பம் வடிமைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT