தமிழ்நாடு

தடுப்புக் காவலில் உள்ளோருக்கு விடுப்பு: மாவட்ட அளவில் அதிகாரம் அளிக்க மசோதா

DIN

தடுப்புக் காவலில் உள்ளோருக்கு விடுப்பு வழங்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான அமைப்புக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தடுப்புக்காவல் சிறைவாசிகள், அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறப்பில் கலந்து கொள்வதற்கு தற்காலிகமாக விடுப்பை அளிக்கும் அதிகாரம் அரசிடம் உள்ளது. இதில் பல நிா்வாக நடைமுறைகள் இருப்பதால் உரிய நேரத்தில் தீா்வு செய்ய முடியவில்லை.

எனவே, தடுப்புக்காவல் சிறைவாசிகள், அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறப்பில் கலந்து கொள்வதற்கு தற்காலிகமாக விடுப்பை அளிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான அதிகார அமைப்புக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

வங்கதேச இளம்பெண்ணுக்கு சென்னையில் மூட்டு சீரமைப்பு

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்?

கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் தீ

நீலகிரி, கொடைக்கானல்: இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ்

SCROLL FOR NEXT