தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் 'ஸ'வையும் இணைத்துப் போட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது.
இதையும் படிக்க- தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார் எனக் குறிப்பிட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்ட தமிழ்த்தாய் படத்தில் 'ஸ' இடம்பெற்றது தொடர்பாக அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.