தமிழ்நாடு

'நீட்' பயிற்சி நிறுவனங்கள் கொள்ளைக்கு வசதியாக உள்ளது: அமைச்சர் பொன்முடி

DIN

'நீட்' உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்குமே தவிர, மாணவர்களுக்கு பயனளிக்காது என்று உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி கூறினார். 

சென்னை பல்கலைக் கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: 

'நீட்' உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்குமே தவிர, மாணவர்களுக்கு பயனளிக்காது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தமைக்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். 

மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால், பல்கலையில் கல்வி இன்னும் வளரும், அதனால்தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். 
பெண் கல்வி உயர் வேண்டும் என்பதால் தான் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பெயர் தான் திராவிட மாடல் அரசு என்று கூறினார். 

மேலும், தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக உள்ளதாக நமது ஆளுநரே கூறியுள்ளார், அது தான் உண்மை என பொன்முடி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT