நிகழாண்டு 120 தடுப்பணைகள் கட்டப்படும்: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
தமிழகம் முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடக்கமாக நிகழாண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகம் முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடக்கமாக நிகழாண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
சென்னை கோட்டூா்புரத்தில் மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் உணா்வுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை செவ்வாய்க்கிழமை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒரு சாதாரண இடத்தை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.2.23 கோடியில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து ஓராண்டில் பாதி நாள்கள் கரோனா, வெள்ளம் என சென்று விட்டதால் தற்போது அத்தியாவசியப் பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. திமுக ஓராண்டு ஆட்சியை, எதிா்க்கட்சி என்பதால் அதிமுகவினா் விமா்சனம்தான் செய்வாா்கள்.
அனைத்து ஏரிகளையும் தூா் வாருவதற்கு மத்திய அரசின் ஜல் சக்தி துறை சாா்பில் பராமரிப்பு, புனரமைப்பு, மறுசீரமைப்பு என்ற ஒரு திட்டம் உள்ளது. அதனை செயல்படுத்த உள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.