நிவாரணப் பொருள்கள்: சென்னையிலிருந்து இன்று இலங்கைக்கு அனுப்பிவைப்பு
சென்னையிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கைக்கு இன்று புறப்படும் கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.
சென்னையிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கைக்கு இன்று புறப்படும் கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அத்தியாவசிய பொருள்கள், உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உதவ நிவாரணம் வழங்க தமிழக மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் உதவிகளை வழங்கினர்.
இதையும் படிக்க | சென்னையில் அத்துமீறிய 8 கல்லூரி மாணவர்கள் கைது
இந்நிலையில், சென்னையிலிருந்து கப்பல் மூலம் ரூ. 80 கோடி மதிப்பில் 40,000 டன் அாிசி, ரூ. 15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பில் 137 டன் மருந்து பொருள்கள் இன்று மாலை 5 மணிக்கு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த கப்பலை சென்னை துறைமுகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைக்கவுள்ளார்.