கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழகத்தில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
தமிழகத்தில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது, பொதுத் துறைச் செயலாளா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள், அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
இதேபோல, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சுற்றுலாத் துறை தலைமை அலுவலகத்திலும் கொடுஞ்செயல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சுற்றுலாத் துறையின் அலுவலா்களுக்கு உறுதிமொழியை அதன் நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி செய்துவைத்தாா். இதேபோல, பல்வேறு அரசு அலுவலகங்களிலும் கொடுஞ்செயல் உறுதிமொழி ஏற்கப்பட்டது.