தமிழ்நாடு

பாவூர்சத்திரத்தில் முதன் முறையாக மாட்டுச் சந்தை தொடக்கம்!

DIN

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் மாட்டுச்சந்தை புதன்கிழமை காலை  நடைபெற்றது.

பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பழைய காய்கனி சந்தை அமைந்துள்ளது. இங்கு வியாழக்கிழமை தோறும் ஆடுகள் சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது முதன் முறையாக இங்கு மாட்டுச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. 

புதன்கிழமை தோறும் இச்சந்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் சந்தையான புதன்கிழமை (நவ.2) காலை முதல் 50க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.  

ஆவுடையானூர், பொடியனூர்;, திப்பணம்பட்டி, குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், மேலப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். 

சிறிய கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் மாடுகள் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானதானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT