தமிழ்நாடு

ஆளுநரை திரும்பப் பெற மனு: தில்லி சென்றார் ஆர்.என்.ரவி!

DIN

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக மனு அளிக்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லிக்கு சென்றுள்ளார்.

தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளதாகவும், அந்த மனுவில் திமுக எம்.பி.க்கள் மற்றும் பிற கட்சிகள் கையெழுத்திடவும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மனு குடியரசுத் தலைவரிடம் ஓரிரு நாள்களில் அளிக்கப்படவுள்ள நிலையில், திடீர் பயணமாக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT