சின்ன வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் வரத்துக் குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100 தொட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சின்ன வெங்காயம் வரத்துக் குறைவால் விற்பனை அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் விலை உயர்வை, கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.