தமிழ்நாடு

பிரதமா் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

DIN


பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 11) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 

இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்பட பல கலந்துகொள்ள உள்ளனர். 

பிதமர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விழாவுக்காக 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து 3 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே உள்ள அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு இறங்கு தளத்துக்கு மாலை 4 மணியளவில் வந்து இறங்குகிறார். 

இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

என்.எஸ்.ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய மாநில உளவு பிரிவு போலீசார்,  உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு புதன்கிழமை முதல் 3 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பல்கலைக்கழக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மீண்டும் ஹலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். அங்கிருந்து விமானத்தில் விசாகப்பட்டினம் செல்கிறார். 

இதனிடையை, வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 11 முதல் மாலை 5 மணி வரையிலும் மதுரை - திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT