முகப்பு
தமிழ்நாடு

சீர்காழியில் 3-வது நாளாக மழை: 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

சீர்காழியில் மூன்றாவது நாளாக பெய்துவரும் மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Updated On : 13 நவம்பர் 2022, 1:03 pm IST
பகிர்:

சீர்காழியில் மூன்றாவது நாளாக பெய்துவரும் மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக இரண்டு நாள்கள் கன மழை பெய்தது. சீர்காழியில் அதீத கன மழை 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

இதன் காரணமாக குடியிருப்புப் பகுதியில் விளைநிலங்கள் நீரில் மூழ்கி, மழைநீர் வடியாத நிலையில் இன்று மூன்றாவது நாளாக மழை பெய்து திருவெண்காடு, மங்கைமடம், நெப்பத்தூர், திருநகரி, எடமணல், திருமுல்லைவாசல், ஆச்சாள்புரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. 

Advertisement

Advertisement

நேற்று முன்தினம் கனமழை பெய்த மழை தண்ணீர் வடியாத நிலையில், மீண்டும் மழை பெய்து இருப்பது விவசாயிகள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில் முறையாக வடிகால் ஆறுகளை தூர்வாரி, வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments