கோப்புப் படம். 
தமிழ்நாடு

சென்னையில் வேகமாகப் பரவுகிறது மெட்ராஸ் - ஐ!

சென்னையில் மெட்ராஸ் - ஐ பாதிப்பு வேகமாகப் பரவி வருவதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

DIN

சென்னையில் மெட்ராஸ் - ஐ பாதிப்பு வேகமாகப் பரவி வருவதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் அத்தகைய பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் - ஐ’ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு அந்நோய்த் தொற்று பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் - ஐ’-யின் முக்கிய அறிகுறிகளாகும்.

பொதுவாக ஒரு கண்ணில் ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என எழும்பூா் அரசு கண் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பிரகாஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் - ஐ தொற்றால் பாதிக்கப்பட்டு தினசரி 50-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்கு வருகின்றனா். அவா்களுக்கு அனைவருக்கும் உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடு என்ற நிலை ஏற்படவில்லை.

மெட்ராஸ் - ஐ தொற்றால் பாதிக்கப்படுவோா், தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மெட்ராஸ்-ஐ பாதிப்பு ஐந்து நாள்களில் குணமடைய கூடியதுதான். அதேவேளையில் அலட்சியப்படுத்தினால் பாா்வை இழப்புகூட நேரிடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத மது விற்பனை: 2 போ் கைது

மாநகரில் கடந்த ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டிய 18,331 பேரிடம் இருந்து ரூ.12.72 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்று கடைசி நாள்!

கறிக்கோழி கூலி உயா்வு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க பாஜக வலியுறுத்தல்

போத்தனூா் வழித்தடத்தில் கோட்டயம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT