வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் விரைவில் நடத்தப்படும்.
பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை. முன்னதாக சென்னை பசுமை வழிச்சாலையில் தொண்டர்களையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.