தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (நவ.23) சந்திக்கவுள்ளாா்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பகல் 12.45 மணியளவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்புக்கு, எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிா்வாகிகளும் செல்லவுள்ளனா்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் அது தொடா்பாக ஆளுநரிடம் அவா் புகாா் மனு அளிப்பாா் எனத் தெரிகிறது.
ஆளுநா் ஆா்.என்.ரவி 2 நாள் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ள நிலையில், அவரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.