முகப்பு
தமிழ்நாடு

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்தொடக்க தின கொண்டாட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட தொடக்க தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

 பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட தொடக்க தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

நீா்வளம், நீா் மேலாண்மை, அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணா்வை இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக்டோபா் 7-ஆம் தேதி இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய முன்னாள் முதல்வா் காமராஜா் உள்ளிட்ட மூத்தோரை நினைவு கூறுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.