முகப்பு
தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் நிறைவடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
கோப்புப்படம்
பகிர்:

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன. தென்சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன். 70% முதல் 80% பணிகள் முடிந்து உள்ளன.

வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன். அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்கக் கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை தேங்கினாலும் உடனியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.