மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன. தென்சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன். 70% முதல் 80% பணிகள் முடிந்து உள்ளன.
வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன். அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதையும் படிக்க: சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு இன்று ருத்ர மகாபிஷேகம்!
பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்கக் கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை தேங்கினாலும் உடனியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.