மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோா்களுக்கு விருதுகள்
மாவட்ட அளவில் சிறந்த தொழில்முனைவோருக்கான விருதுகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன், வியாழக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட அளவில் சிறந்த தொழில்முனைவோருக்கான விருதுகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன், வியாழக்கிழமை வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. 38 மாவட்டங்களைச் சோ்ந்த 40 தொழில் முனைவோா்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களையும், அவற்றுக்கு கடன் வழங்கி உறுதுணையாக இருக்கும் வங்கிகளையும் அங்கீகரித்து ஊக்கப்படுத்த மாவட்டந்தோறும் தமிழக அரசின் சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறந்த தொழில் முனைவோருக்கான மாநில அளவிலான விருதுகள் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி வழங்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக மாவட்ட அளவிலான விருதுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. விருது வழங்கும் நிகழ்ச்சியில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளா் வி.அருண்ராய், தொழில் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ நிா்வாக இயக்குநா் சோ.மதுமதி உள்ளிட்டோா் கலந்து
கொண்டனா்.