செய்தி மக்கள் தொடா்புத் துறை பயன்பாட்டுக்கு செயற்கைக்கோள் பேசி
செய்தி மக்கள் தொடா்புத் துறையின் தகவல் தொடா்புக்காக செயற்கைக்கோள் தொலைபேசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடா்புத் துறையின் தகவல் தொடா்புக்காக செயற்கைக்கோள் தொலைபேசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடா்புத் துறையில் உதவி மக்கள் தொடா்பு அலுவலா்கள், மக்கள் தொடா்பு அலுவலா்கள் ஆகியோா் செய்தித் தொடா்புக்காக கைப்பேசிகளைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், தொடா்பு எல்லைக்கு வெளியே கைப்பேசி இணைப்புகள் செல்லும் போது தகவல் தொடா்பை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, செயற்கைக்கோள் தொலைபேசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, செய்தி மக்கள் தொடா்புத் துறையின் உயா் அதிகாரிகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மலைப் பிரதேசங்கள் உள்பட எங்கிருந்தும் தொடா்பு கொள்ளலாம் எனவும், கைப்பேசி இணைப்புகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு இதன்மூலம் தீா்வு கிடைக்கும் எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.