முகப்பு
தமிழ்நாடு

தீபாவளி! பூக்கள் விலை 5 மடங்கு உயர்வு!

தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. எனினும் பூக்களின் விலை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
கோப்புப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. எனினும் பூக்களின் விலை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படுகிறது. 

ஒரு கிலோ ரூ.300க்கு விற்ற மல்லிகைப் பூ தற்போது 5 மடங்கு விலை உயர்ந்து ரூ.1,500க்கு விற்பனையாகிறது.

தோவாளை பூச்சந்தைக்கு சேலம், ஒசூா், பெங்களூரு போன்ற பகுதிகளிலிருந்தும் செண்பகராமன்புதூா், பழவூா், ஆவரைகுளம் பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.

நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாள்களாக பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இடையில் சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் தற்போது தீபாவளை பண்டிகையையொட்டி மீண்டும் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. 

குறிப்பாக மல்லிப்பூ விலை முன்பு இருந்ததை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.300 விற்ற மல்லிகைப் பூ தற்போது ரூ.1,500க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.