முகப்பு
தமிழ்நாடு

இரவு ரோந்து போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படி

தமிழகத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தமிழகத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்பட பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படியாக வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது அறிவித்தாா்.

இந்த அறிவிப்பின் படி, காவலா்கள் தொடங்கி காவல் ஆய்வாளா்கள் வரை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டால் மாதம் ரூ.300 சிறப்பு படியாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையின்படி, இந்த மாதம் முதல் காவலா்களுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதற்காக தமிழக அரசு, ரூ.42 கோடியே 22 ஆயிரத்து 800 ஒதுக்கீடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.