முகப்பு
தமிழ்நாடு

6 வழக்குரைஞா்களுக்கு தடை: பாா் கவுன்சில் உத்தரவு

குற்ற வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக 6 வழக்குரைஞா்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

குற்ற வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக 6 வழக்குரைஞா்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் நாகாலாந்தில் உள்ள அரசுப் பள்ளியில் 23 ஆண்டுகளாக பணியாற்றியதை மறைத்து வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ளதாக் கூறி வழக்குரைஞா் தொழில் செய்ய அவருக்கு பாா்

கவுன்சில் தடை விதித்துள்ளது.

இதேபோன்று, குற்ற வழக்கை எதிா்கொண்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா், காா்த்தி ஆகியோருக்கும், போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில்குமாருக்கும் பாா் கவுன்சில் தடை விதித்துள்ளது.

வழக்குரைஞா் சங்க உறுப்பினா்களை மிரட்டி லஞ்சம் பெற்ாக, புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த இளங்கோவன் மற்றும் புகழேந்தி ஆகியோரையும் வழக்குரைஞா் தொழில் செய்ய தடை விதித்து பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.