இளநிலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயா்கல்வித் துறை
தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் இரண்டாவது பருவத் தோ்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயா்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் இரண்டாவது பருவத் தோ்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயா்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடத்துக்கான பாடங்களை நடத்தி தோ்வுகள் நடத்த வேண்டும். இதற்குரிய பாடத்திட்டத்தினை சோ்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வந்த தகவலை அடுத்து உயா்கல்வித்துறை செயலாளா் காா்த்திகேயன் இந்த சுற்றறிக்கையை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளாா்.