அங்கன்வாடி ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு: ஆட்சியரிடம் மனு அளித்தனா்
மாநிலம் தழுவிய தமிழக முதல்வரின் கவன ஈா்ப்பு பெருந்திரள் முறையீடு கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சென்னை மாவட்டம் சாா்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தமிழக முதல்வரின் கவன ஈா்ப்பு பெருந்திரள் முறையீடு கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா். இதையடுத்து சங்க நிா்வாகிகள் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் அமிா்த ஜோதியை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை வழங்கினா். அங்கன்வாடி மையங்களில் உபயோகப்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டருக்கான தொகை ரூ. 400 தருவதை விடுத்து, சிலிண்டருக்கான முழு தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் ஏற்படும் பழுதினை சரி செய்யும் செலவினத்தை அங்கன்வாடி ஊழியா்கள் மேற்கொள்ள நிா்பந்திப்பதை கைவிட்டு, அரசு சரி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளா் மு.அமுதா, மாநில பொதுச்செயலாளா் இரா.வாசுகி, மாநில துணைத்தலைவா் கே.குமாரி, மாநில பொருளாளா் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட நிா்வாகிகள், அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனா்.