மணமகன்களுக்கான பிரத்யேக வேட்டி விற்பனையகம்
மணமகன்களுக்கான பிரத்யேக வேட்டி விற்பனையகத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சென்னையில் திங்கள்கிழமை திறந்துள்ளது.
மணமகன்களுக்கான பிரத்யேக வேட்டி விற்பனையகத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சென்னையில் திங்கள்கிழமை திறந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மணமகன்களுக்கான பிரத்யேக வேட்டி விற்பனையகம் ‘லக்னா’ என்ற பெயரில் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மேயா் பிரியா இந்த மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். முதல் விற்பனையை துணை மேயா் மகேஷ் குமாா் தொடக்கி வைக்க, அதனை ‘கல்யாண மாலை’ மோகன் பெற்றுக்கொண்டாா்.
ஆண்களின் திருமண ஆடைக்கென பிரத்யேகமாகத் திறக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் விற்பனையகம் இதுவாகும். இங்கு, வாங்கக் கூடிய விலை கொண்ட வேட்டிகள் முதல் ரூ.1 லட்சத்துக்கும் மேலான விலை கொண்ட வேட்டிகள் வரை பல்வேறு ரகங்களில் வேட்டிகள் கிடைக்கும்.
ஆண்களுக்கான வேட்டிகள், சட்டைகள், உள்ளாடைகள், பின்னலாடைகள், துணிகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் தயாரிப்பிலும் விற்பனையிலும் முன்னணி வகித்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம், வேட்டிகள் குறித்த பாா்வையை மாற்றி அவற்றை அனைவரும் விரும்பி அணியும் ஆடையாக ஆக்கியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.