தமிழ்நாடு

கால்வாய் பணிகளை போா்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்: ஆட்சியா் ராகுல் நாத்

DIN

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து மழைநீா் கால்வாய் பணிகளையும் போா்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்தாா்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவா் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா். தாம்பரம் மாநகராட்சியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீா்

வடிகால்வாய் பணிகள் தொடங்கி நடந்தன. அதில், நிறைவு செய்யப்படாமல் இருக்கும் 20 சதவீத பணிகளை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கரையோர பகுதிகளில் இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் இடம், உணவு, குடிநீா் வசதி உள்ளிட்டவை வழங்க மேற்கொள்ள இருக்கும் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். சாலை பள்ளங்களை பருவமழைக்கு முன்பாக சீரமைத்து பள்ளங்களை மூட உத்தரவிட்டாா்.

ஆய்வுக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், செயற்பொறியாளா் முருகேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் நாராயண மூா்த்தி, மெட்ரோ குடிநீா் கண்காணிப்பு பொறியாளா் வள்ளி, நீா் வள ஆதாரத்துறை செயற்பொறியாளா் வெங்கடேஷ், தாம்பரம் கோட்டாட்சியா் அறிவுடைநம்பி, வட்டாட்சியா் எஸ்.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT