தமிழ்நாடு

மாநில அளவிலான தடகளப்போட்டி: தேர்வு பெற்றுள்ள மாணவர்களுக்கு பாராட்டு

DIN



நீடாமங்கலம்: மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கும் நீடாமங்கலம் நீலன்மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் கிருஷ்ணா 800 மீட்டர் ஓட்டத்தில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

11 ஆம் வகுப்பு மாணவன் அகிலன் ஈட்டி எரிதலில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கும், 12 ஆம் வகுப்பு மாணவன் பிரதீப் தடைதாண்டுதல் ஓட்டத்தில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர்கள் ஜி.பிரிதிவிராஜ், பி.நந்தகுமார் ஆகியோரையும் பள்ளி நிறுவனர் உ.நீலன், பள்ளி தாளாளர் நீலன். அசோகன், பள்ளி செயலாளர் அ.சுரேன், பள்ளி முதல்வர் ஹேமாமாலினி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வெகுவாகப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT