தமிழ்நாடு

மாநில அளவிலான தடகளப்போட்டி: தேர்வு பெற்றுள்ள மாணவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கும் நீடாமங்கலம் நீலன்மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN



நீடாமங்கலம்: மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கும் நீடாமங்கலம் நீலன்மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் கிருஷ்ணா 800 மீட்டர் ஓட்டத்தில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

11 ஆம் வகுப்பு மாணவன் அகிலன் ஈட்டி எரிதலில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கும், 12 ஆம் வகுப்பு மாணவன் பிரதீப் தடைதாண்டுதல் ஓட்டத்தில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர்கள் ஜி.பிரிதிவிராஜ், பி.நந்தகுமார் ஆகியோரையும் பள்ளி நிறுவனர் உ.நீலன், பள்ளி தாளாளர் நீலன். அசோகன், பள்ளி செயலாளர் அ.சுரேன், பள்ளி முதல்வர் ஹேமாமாலினி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வெகுவாகப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT